இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான மேலும் ஒன்பது பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை மூவாயிரத்து 333 ஆக அதிகரித்துள்ளது.
மாலைதீவு, கட்டார், குவைத், ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு திரும்பிய ஏழு பேருக்கும் நாட்டில் தங்கியிருந்த ஈரானிய பிரஜைகள் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு முழுமையாக குணமடைந்த 13 பேர் நேற்று வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியிருக்கின்றனர்.
இதனால் இலங்கையில் கொரோனாத் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மூவாயிரத்து 142 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ந்தும் 178 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
உலக அளவில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 24 இலட்சத்தை நெருங்கியுள்ளது. அதேபோல 9 இலட்சத்து 88 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்த்ககது.